ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல சட்டப் பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றுச் சக்தியாக பாஜக உருவெடுத்து வருகிறது. பீகாரில் சட்ட மன்ற தேர்தல் முடிந்ததும், தமிழக பாஜகவை பலப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் வருகைதர உள்ளனர்.