ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதில் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை: முரளிதர ராவ்

செவ்வாய், 26 மே 2015 (14:48 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதில் பாஜகவுக்கு தொடர்பில்லை என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
 

 
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியசாமி உள்ளிட்டோருக்கு தான் முன்னுரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக ஒரு எதிர்கட்சி போல செயல்படுவதாகவும் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
 
அதிமுக தவறு செய்தால் பாஜக சுட்டிக்காட்டும் என அவர் கூறியுள்ளார். சிறு தொழில்முனைவோருக்கு பாஜக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்