சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவும், அவருடைய ஆதரவை பெறவும் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள் முயற்சித்து வந்தாலும், தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளது.
ஆனாலும் பாஜக அவரை விடுவதாக இல்லை. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் ரஜினி ஆதரவு இருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைத்துவிடலாம் என்றே பாஜக உறுதியாக நம்புகிறது. இதுவரை பணிந்து கேட்ட பாஜக முதல்முறையாக மிரட்டல் தொனியில் ரஜினியிடம் பேசியதாக தெரிகிறது.
பாஜகவுக்கு வரமுடியுமா? முடியாதா? என்று தூதர் ஒருவர் மூலம் ரஜினியிடம் அமீத்ஷா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையும் ரஜினியிடம் இருந்து 'நோ' பதில் வந்தால் வழக்கமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இதனால் ரஜினி வீட்டுக்கு எந்த நேரமும் வருமானவரி ரெய்டு வரவும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.