பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

புதன், 25 நவம்பர் 2015 (23:05 IST)
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், புதிய கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் மழை வெள்ளம் சேதம் குறித்த தமிழக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்று,  முதல் கட்டமாக ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மேலும், தமிழகத்திற்கு தேவையான அடுத்த கட்ட நிதியை வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன்.
 
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமைக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளது என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்