இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் மழை வெள்ளம் சேதம் குறித்த தமிழக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, முதல் கட்டமாக ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மேலும், தமிழகத்திற்கு தேவையான அடுத்த கட்ட நிதியை வழங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன்.