பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், 12 ஜனவரி 2016 (23:45 IST)
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் பருவ புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் வைத்த கோரிக்கயை ஏற்று, தண்ணீர் திறந்துவிடப்படும்.
 
இதன் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்