சில தினங்களுக்கு முன்னர், வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த முருகன் திடீரென மரம் வெட்டும் கத்தியால் பூங்கொடியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால், பூங்கொடி சம்பவ இடத்தியே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, முருகன் தெள்ளார் காவல் நிலையத்திற்குச் சென்று சரண் அடைந்தார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.