சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் `சமூக தணிக்கைப் பிரிவு’ என்ற பெயரில் புதிய தகவல் உதவி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், பொது மக்களின் குறைகள் உடனே கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை தற்போது 2 ஆயிரத்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், நேர்முகத் தேர்வுக்கான முன்அனுமதி பெறும் காலஅவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரம் இன்றி விரைவாக பாஸ்போர்ட் பெறமுடியும் என்றார்.