இவ்வாறு கொண்டு வரப்படும் ஒட்டகங்கள், இறைச்சி கூடங்களில் வெட்டாமல், பொது இடத்தில் வைத்து மக்கள் முன்னிலையில் வெட்டப்படுகிறது. இது மிருகவதைச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
எனவே, சட்ட விரோதமாக தமிழகத்திற்கு ஒட்டகங்களை கொண்டு வருவதையும், அவற்றை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்று பிறப்பித்தனர்.
அதில், ஒட்டகங்கள் பொது மக்கள் முன்னிலையில் வெட்டுவது குறித்து புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை, கால்நடை வளர்ப்பு, சாலை போக்குவரத்து, சென்னை மாநகராட்சி, மனுதாரர் வக்கீல் சீனிவாசன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய விலங்கு நல வாரியம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஆகியோரை கொண்ட ஒரு குழுவை நியமிக்கின்றோம்.
இந்த குழு ஒரு வாரத்துக்குள் முதல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி, ஒட்டகம் வெட்டுவது குறித்து ஆலோசனை செய்து, பரிந்துரைகளை இந்த நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.