கிருஷ்ணகிரி விபத்து; பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு

வெள்ளி, 3 ஜூன் 2016 (16:56 IST)
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் பஸ், கார்கள் மீது லாரி மோதியதில் 17 பேர் பலியானார்கள். கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும் சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் இறங்கும் போது விபத்து ஏற்பட்டது.


 
 
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மறு மார்க்கத்தில் பஸ் வந்த சாலையில் சென்று, பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. இதில் 17 பேர் இறந்தனர்.
 
இந்த சம்பவத்தில் 17 பேரது உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் 
தெரிவித்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. காயமடைந்தவர்களில் பலருக்கு எழும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. சூளகிரி போலீசார் மற்றும் பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்