சென்னையில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தனி வரிசையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தனி வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு பி.எட் படிப்பிற்கு பொறியியல் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால். விண்ணப்ப விநியோகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன, தேவைபடும் பட்சத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.