சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடாது

வியாழன், 15 செப்டம்பர் 2016 (17:22 IST)
நாளை நடைபெற உள்ள முழுகடையடைப்பு போராட்டத்துக்கு சென்னையில் ஆட்டோ சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டில் நாளை வணிக சங்கத்தினர் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
 
இந்த போராட்டத்திற்கு ஆம்னி பேருந்துகள் சங்கம், லாரி சங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து கோவையில் ஆட்டோ சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
 
தற்போது சென்னை ஆட்டோ சங்கத்தினரும் இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
அதிமுக கொழிற்சங்கம் தவிர மற்ற 11 ஆட்டோ சங்கங்கள் நாளை போரட்டத்துக்கு ஆதரவு. மொத்தம் 2.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்