கடந்த 31.1.2013 அன்று திமுகவை சேர்ந்த பொட்டு சுரேஷ் காரில் சென்ற போது அவரது காரை வழிமறித்த சிலர் அவரை படுகொலை செய்தனர். இது குறித்து, சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்தனர்.
இந்த நிலையில், மும்பை புறநகர் பகுதியில் பதுங்கி இருந்த அட்டாக் பாண்டியை தமிழக காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அட்டாக் பாண்டியை கைது செய்த தமிழக காவல்துறையினரின் பணி பாராட்டுக்குரியது என்று மனதார பாராட்டினார். தமிழக காவல்துறையினர் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஏற்கனவே, பாராட்டிள்ளது குறிப்பிடதக்கது.