சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் நீட்டிப்பு

வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (13:30 IST)
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீனை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
 
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து நான்கு பேர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்