அதிமுக என்றாலே ஜெயலலிதாவின் பெயரில் யாகங்கள், வேண்டுதல்கள், காவடி எடுத்தல், மொட்டை அடித்தல், அலகு குத்துதல், விதவிதமான நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். கடந்த முறை ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது அவர் வெளியே வர வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் செய்த ஆன்மீக வழிப்பாடுகளை தமிழ்நாடே அறியும்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளதை தொண்டர்கள் அறிந்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் அவர் ஜெயிலுக்கு சென்றால் அவருடய நிலமை இன்னும் மோசமாகும் என்பதால், ஜெயலலிதா இந்த வழக்கில் வெற்றி பெறவும், அவருக்கு நல்ல உடல்நிலை கிடைக்கவும் அதிமுகவினர் யாகம், பூஜை, அர்ச்சனை என ஆரம்பித்துள்ளனர்.