அரவக்குறிச்சி அதிமுக வெற்றிக்கு இவர் சொன்ன ரகசிய தகவல் தான் காரணமாம்!

புதன், 23 நவம்பர் 2016 (09:18 IST)
தமிழகத்தில் நேற்று வாக்கு எண்ணப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக வெற்றி பெற்றது. அவர்களது தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் இறங்காத நிலையில் கிடைத்த இந்த வெற்றி ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.


 
 
அதிமுக இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றி செய்தியை தான் அம்மாவின் காதுக்கு கொண்டு செல்லவேண்டும் என தீவிரமாக இருந்தது. மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தது அதிமுக. ஆனால் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிலமை கொஞ்சம் தள்ளாடும் நிலையில் இருப்பதாக இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கொடுத்த தகவலுக்கு பின்னரே உஷார் ஆகியிருக்கிறார்கள்.
 
அதிமுகவுக்கு அதரவாக அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்த இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஜவஹர் அலி கள நிலவரத்தை சரியாக கணித்து வெற்றி வாய்ப்பு சிரமமாக இருப்பதை சசிகலா தரப்பினருக்கு கூறியுள்ளார். கொஞ்சம் அசால்டாக இருந்தவர்கள் அதன் பின்னரே சுதாரித்துக்கொண்டு அந்த தொகுதியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
 
சிறிய கட்சியின் சரியான ரகசிய தகவலால் அதிமுக அந்த தொகுதியையும் கைப்பற்றி வெற்றியை முழுமையாக கொண்டாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்