ஓட்டுநர் இல்லாமல் பின்னோக்கி சென்ற மின்சார ரயில்: அரக்கோணத்தில் பரபரப்பு

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (20:03 IST)
ஓட்டுனர் இல்லாமல் பின்னோக்கி சென்ற மின்சார ரயில் காரணமாக அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அரக்கோணம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் என்பதும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அந்த ரயில் நிலையத்தில் சென்று வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுனர் இன்றி மின்சார ரயில் வண்டி திடீரென பின்னோக்கி சென்றது. இதனால் அந்த ரயிலில் இருந்த பயணிகள் பெரும் பரபரப்பு அடைந்தனர் 
 
தண்டவாளத்தில் சுமார் அரை கிலோமீட்டர் அந்த ரயில் சென்றதாகவும் அதன் பின்னர் மின்சார ரயில் மண்ணில் சிக்கி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்