பிரதமர் நரேந்திர மோடியின் 65 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானத்தின் மீது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதே வேளையில், இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என்றார்.