புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதுல்ய மிஸ்ரா மற்றும் அபய் குமார் சிங் ஆகிய இருவரும் தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அவர்கள் விரைவில் சென்னை தலைமை செயலகத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொள்ள உள்ளனர்.