தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

Siva

வெள்ளி, 6 மார்ச் 2026 (18:26 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், மாநில தகவல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான அதுல்ய மிஸ்ரா மற்றும் அபய் குமார் சிங் ஆகியோரை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
தமிழக தகவல் ஆணையத்தில் நிலவி வந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, முதல்வர் தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதுல்ய மிஸ்ரா மற்றும் அபய் குமார் சிங் ஆகிய இருவரும் தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அவர்கள் விரைவில் சென்னை தலைமை செயலகத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொள்ள உள்ளனர். 
 
தகவல் ஆணையத்தில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து முடிப்பதே இவர்களின் முதன்மையான பணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்