திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 93ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.
கேள்வி:- கர்நாடக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் வகையில் அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறதே?.