இந்த மாநாட்டை முன்னிட்டு, திருச்சி மாநகர் தியாகச் செம்மல்கள் கீழப்பாமர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தொடங்கி திருச்சி மாநகர், புறநகர், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக 324 கி.மீ., தூரம் திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டமாக வருகிறார்கள். இந்த சுடரினை செப்டம்பர் 15 காலை 10 மணிக்கு மாநாட்டு மேடையில் நான் பெற்றுக்கொள்கிறேன்.