கடந்த 44 ஆண்டுகளில் திமுக அரசும் அதிமுக அரசும் 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்த வைத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி என்றும், டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்து வைத்து வினியோகம் செய்து வருபவர் ஜெயலலிதா என்றும் கூறினார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்துள்ளார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் திமுகவும் அதிமுக தமிழகத்தை ஆண்டு 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்துள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றில் 5 ஆலைகளை தி.மு.க.வினரது எனறும், 3 ஆலைகளை அ.தி.மு.க.வினரது என்றும்
இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினரது என்றும் தெரிவித்தார் மேலும், தமிழகத்தின் வருவாய் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் 36 ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் வருகிறது என்று குறிப்பிட்டார்.