இந்த திருமணத்தில் அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் 68 மணக்களுக்கும் கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
68 மணமக்களின் நெற்றியிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள், சமூக வலைதளாங்களில் வெளியாகின. அவை கிண்டல் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை மழை வெள்ளத்தின் போது நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இலவச திருமணத்திலும் மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, சமூக வலைதளத்தில் இருப்பவர்களுக்கு மீண்டும் தீணி கிடைத்துள்ளது போல் உள்ளது. அம்மா ஸ்டிக்கரை விமர்சித்தும், கேலியும் கிண்டலுமாக சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.