இதனால், பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் கொதித்துப் போயுள்ளனர். தமிழகத்தில் விளம்பரத்தைக் கொடுத்து, தமிழ்நாட்டில் வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனம் தமிழர்களுக்கு தகுதி இல்லை என எவ்வாறு அறிவிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இணையத்தளங்களில் இது குறித்து விவாதங்களும், கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் காவல் துறையினரிடம் அளித்துள்ள புகாரில், ''இது தமிழர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சி. அமேசானின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.