இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இஸ்மாயில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமாக போரிட்டு, மறைந்தவர் திப்பு சுல்தான்.
ஆனால், எங்களது கட்சி, மதசார்பற்ற கட்சி என்பதால், திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தோம். இதற்காக குடியாத்தம், ஆலிகர் தெருவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.
இந்த ஆலிகர் தெருவில்தான், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்துகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு குடியாத்தம் காவல் நிலையத்தினரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தேன்.