சென்னையில் அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளார்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் நடந்து வருவதாகவும், விஜயகாந்த் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வருவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து தேமுதிகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டது, இதனால் விஜயகாந்த் தனது முடிவை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.