மு.க.ஸ்டாலின் தான் வகிக்கின்ற பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து எங்களை போன்றவர்கள் கூட, கட்சி தலைமை கழக நிர்வாகிகள், வட்ட, பகுதி கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், லட்சக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வற்புறுத்தினோம். தலைவர் கருணாநிதியின் அறிவுரையை ஏற்றுக்கொண்டும், எங்களை போன்றவர்களின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டும் எங்களை எல்லாம் மகிழ்விக்க தக்க வகையில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து வற்புறுத்தபோவதில்லை என்று அறிவித்து இருக்கிறார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று துரைமுருகன் கூறினார்.