படப்பிடிப்பில் ஒரு நாள் ரஜினிகாந்த் நடந்து கொண்ட விதம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டதும் ஓரமாக சென்று உட்கார்ந்து இருந்தார். அவருக்கு பணிவிடைகள் செய்ய சுற்றிலும் 15 பேர் நின்று அவரது கண் அசைவுக்காக காத்துக்கொண்டு நின்றார்கள்.