மனோரமாவின் உடலுக்கு நடிகர் அஜித்குமார் நேரில் அஞ்சலி

ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (13:44 IST)
50 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகை ஆட்சி செய்த பழம்பெரும் நடிகை மனோரமா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது உடலுக்கு நடிகர் அஜித்குமார் மணைவி ஷாலினியுடன் அஞ்சலி செலுத்தினார்.
 
சென்னை தியாகராய நகரில் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகை மனோரமாவின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இவரது உடலுக்கு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், ராதிகா சரத்குமார், ராதாரவி, சினோகா,  பிரசன்னா, விஜயகுமார், சிவக்குமார், செந்தில், உள்ளிட்ட பல திரையுல பிரமுகர்கள் அதிகாலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், இந்நிலையில், நடிகர் அஜித்குமார் மணைவி ஷாலினியுடன் நேரில் சென்று ஆச்சியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 
தற்போது அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் குவிந்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணரி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்