லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும், குடிப் பிரச்சனையை கையாள்வதிலும் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“அரசுத்துறைகளுக்கு ஒளிவு மறைவின்றி, மூப்பு அடிப்படையில் ஆள் எடுப்பதில்லை என்று 88 விழுக்காட்டினரும், குடிப்பிரச்சனையை கையாள்வதில் அரசு மோசமாக செயல்படுகிறது என்று 78 விழுக்காட்டினரும்” கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, மக்கள் ஆய்வகம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 34.1% மக்களும், திமுகவுக்கு 32.6% மக்களும், தேமுதிகவுக்கு 4% மக்களும், பாமகவுக்கு 3% மக்களும், பாஜகவுக்கு 2.9% மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.