இந்நிலையில், சங்கரின் தந்தை வேலுசாமி, தம்பி விக்னேஷ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கவுசல்யாவை பார்க்க வந்தனர்.அப்போது கவுசல்யா தனது மாமனார் வேலுசாமியிடம் "நான் சிகிச்சை முடிந்ததும் நேராக உங்கள் வீட்டுக்கு வந்து விடுவேன்.நான் தொடர்ந்து படித்து வேலைக்கு சென்று உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை மருமகளாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு மகளாக இருந்து நன்றாக கவனித்துக் கொள்கிறேன்." என்று கண்ணீர் மல்க கூறினார். இதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த வேலுசாமி, கவுசல்யாவிற்கு ஆறுதல் கூறினார். பின்னர், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வருமாறு கூறினார்.