ஜெயலலிதா மறைவு துக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை

வியாழன், 8 டிசம்பர் 2016 (16:33 IST)
செங்கல்பட்டு அருகே கரிமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி, ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்த காஎசியை பார்த்த பிறகு மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். 


 

 
செங்கல்பட்டு அருகே கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெரியநாயகி என்பவர் பிளஸ்-1 படித்து வந்தார். ஜெயலலிதா மறைவு செய்தியை அறிந்த இவர் காலை முதல் வீட்டில் சாப்பிடாமல் இருந்துள்ளார். 
 
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்த காட்சியை பார்த்த பிறகு மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்