விஷ்னுப்ரியா வழக்கில் திருப்பம் : வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி

வியாழன், 26 நவம்பர் 2015 (12:33 IST)
காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, முக்கிய சாட்சியாக கருதப்பட்ட மதுரை வழக்கறிஞர் தற்கொலை முயற்சி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்ட மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மாளவியா, சிபிசிஐடி  தன்னை டார்ச்சர் செய்வதாகவும், தனக்கும் விஷ்னுபிரியாவிற்கும் காதல் என்றும், அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தன்னை ஒத்துகொள்ள சொல்வதாகவும் என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே ஊடகங்கள் வழியாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில்,  சிபிசிஐடி  நெருக்கடியால் அவர் இன்று மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி  செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அப்பொழுது அவரை வீட்டின் அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அவர், தற்பொழுது  ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அவரின் தற்கொலை முயற்சி, விஷ்ணுபிரியா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்