சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. ஆனால், 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமீபகாலமாக ராசியான தேதியாக கருதப்படுகிறது.