அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது அதிமுக, இந்த பட்டியலில் மூத்த அமைச்சர் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெறாத நிலையில் பாத்திமா பாபுவின் பெயர் இடம் பெற்றது.
நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் ஈரோட்டில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்தார் பாத்திமா பாபு. இதில் பேசிய அவர், இஸ்லாமியர் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகம்மது நபிகள், ஒவ்வொருவரின் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்று கூறி இருக்கிறார். அப்படி பார்க்கையில் ஜெயலலிதா அம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.