இந்த நிலையில், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி பேரூராட்சிகள் மற்றும் வார்டு உறுப்பினருக்கான பதவிகள், 9 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்பமனு வாங்கும் பணி ஜலகண்டாபுரத்தில் தொடங்கப்பட்டது.
ஒன்றிய செயலார் எமரால்டு வெங்கடாஜலம், விருப்பமனுக்களை பெற்றார். முதல் நாளிலேயே, பல்வேறு பதவிகளுக்கு100 க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். இதே போன்று, பனமரத்துப்பட்டி அதிமுக நிர்வாகிகளிடம் மனு வாங்கப்பட்டது.