கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எனும் ஊரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஜெயலலிதாவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. மேலும், அங்கு பேனர் வைக்க போலீசாரிடம் அனுமதி பெறவில்லை.
இதனால், அந்த பகுதி காவல்துறை ஆய்வாளர் சாம்சன், அந்த பேனரை அகற்ற உத்தரவிட்டார். அதனால் கோபமடைந்த அந்த பகுதி ஒன்றிய செயலாளர் உதயகுமார், சாம்சனுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். மேலும் அவரை ஒருமையில் திட்டியுள்ளார்.