முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலே குழந்தைகள் உயிரிழந்ததாக விளக்கம் அளித்ததை சுட்டிக் காட்டிய அவர், அப்படியென்றால் அரசு மகப்பேறு காலத்தில் வழங்கும் நிதியுதவி பெண்களுக்கு முறையாக சேரவில்லையா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவைத் தலைவர் இருக்கை அருகே வந்து கூச்சல் எழுப்பினர். மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், அதிமுக உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி பல முறை வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.