நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண வசூல் செய்ததாக, அதிமுக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் போலீசார் ரகசிய வாக்கு மூலம் பெற்றுவருகின்றனர். இதில், அமை்ச்சர்தகள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழக அதிமுக தேர்தல் பாதை மேலும் சூடுபிடிக்கலாம்.