அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய் துறையினர்: தொண்டர்கள் அதிர்ச்சி!

திங்கள், 11 ஜூலை 2022 (13:17 IST)
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய் துறையினர்: தொண்டர்கள் அதிர்ச்சி!
அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்தது என்பதும் அதில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதே நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில் அதிமுக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் சீல் வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்