முதல்வர் தொகுதியில் அதிமுக பெண் நிர்வாகி தீக்குளிப்பு

வெள்ளி, 24 ஜூன் 2016 (17:01 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பெண் நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், 38 வது வட்ட துணை செயலாளாக இருப்பவர் ஹேமாவதி (39). இவரது கணவர் விக்டர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 
 
இதில், விக்டர் அடிக்கடி மது குடித்து வருவதால், ஹேமாவதிக்கும், விக்டருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுமாம். இந்த நிலையில், ஹேமாவதி திடீரென தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, அவர் படுகாயங்களுடன் மருத்துவமழையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்