இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்கவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் யாரும் இல்லை என்ற நிலை அடையவும், பெண்களின் வாழ்வு உயரவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கவும், அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைக்கவும், பொற்காலத் தமிழகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம் என்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.