இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரம், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை தேர்தல், மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட, சிதம்பரம் நகர 31 ஆவது வார்டைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.கருணாகரன் என்பவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் தான் மரணம் அடைந்தார்.
அதேபோல, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார்.
இவர்கள் இருவரும் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையுற்றேன். அன்புச் சகோதரர்கள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.