அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி தன்னை தாக்கியதாக கூறி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்த சித்ரா, காவல் துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் வீட்டு விஷேசத்திற்காக வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி முருகம்மாள் ஆகியோரை அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி தகாத வார்த்தையில் பேசியும், அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.