புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழ் மற்றும் தமிழர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். எனவே, ஜெயலலிதாவை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். வரும் சட்ட மன்றத் தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என என்றார்.