உன்னையே நம்புகிறேன்.. நீ இல்லாமல் வாழ முடியாது : யாரிடம் கூறினார் வரலட்சுமி?

செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:46 IST)
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 26ம் தேதி ஒரு புதிய பதிவை இட்டுருந்தார்.


 

 
அந்த பதிவில் “என்னுடைய காதலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனக்கு தேவைப்படும் போது என் அருகில் நீ மட்டுமே இருக்கிறாய். உனக்கு நன்றி. நீ இல்லாமல் வாழ முடியாது. உன்னை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
யாரது விஷாலா? சிம்புவா? என்று கேட்கிறீர்களா?
 
இல்லை. அவர் வளர்க்கும் செல்ல நாய்  ‘முவா’ பற்றிதான் வரலட்சுமி அப்படி குறிப்பிட்டுள்ளார்.  அந்த நாய் குட்டியோடு, அவர் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்