இந்நிலையில் படக்குழுவினர் மீது அன்சிபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, நான் சில தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தேன். ஒரு படத்தில் நடித்தபோது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த படத்துக்காக என்னை குட்டை பாவாடையை அணிய வைத்து புகைப்படம் எடுத்தார்கள். அந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை. ஆனாலும் வற்புறுத்தி படம் பிடித்தார்கள். இதுபற்றி கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள் என்றார்.