காரணம், திமுகவுக்கு ஆதரவாக இறங்கி, விஜய்காந்தை கடுமையாக திட்டி, கிண்டலடித்து பிரச்சாரம் செய்தார் வடிவேலு. ஆனால், இப்போது அதே திமுக, கூட்டணிக்காக விஜயகாந்திற்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது. ஏன்... காத்துக் கிடக்கிறது. இது வடிவேலுவை கடுமையாக பாதித்துள்ளதாம். இதற்காகவா நான் அப்படி பிரச்சாரம் செய்தேன் என்று நொந்து கொண்டாராம். ( பாவம்..அரசியல் பற்றி இப்போதுதான் அவருக்கு புரிந்திருக்கும் போல...)