சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது.
அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
“அந்த இரு இளைஞர்களும் என்னை பயமுறுத்தி மிரட்டிய போது, அவர்கள் கைகள் என் மீது படாமல் நடிகர் சூர்யா பார்த்துக் கொண்டார். அந்த வாலிபர்கள் என்னை மிரட்டினார்கள். என் கார் கண்ணாடியை உடைக்க முயன்றார்கள். மேலும், பாதுகாப்பு கருதி என்னுடைய காருக்குள் அமர என்னை அவர்கள் விடவில்லை. என்னிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர்.