இந்நிலையில், இது குறித்து, நடிகர் சிம்பு தனது ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசுகையில், "போராட்டத்தை கைவிட இளைஞர்கள் கால அவகாசம் கேட்டனர். அதை வழங்கியிருக்கலாம். ஆனால், எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நடவடிக்கையிலேயே காவலர்கள் இருந்தனர்.
தற்போது கூட, நான் மெரீனாவுக்குதான் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. நமது போராட்டம் கிட்டதட்ட வெற்றியடைந்து விட்டது என்பது என் கருத்து.