பீப்’ பாடல்: நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் மீண்டும் போராட்டம்

வெள்ளி, 18 டிசம்பர் 2015 (23:06 IST)
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தயாரித்துள்ள ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பீப் சாங் என்ற ஆபாசப் பாடலை கண்டித்து, நடிகர் சிம்பு வீட்டு முன்பு 
பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் மகஇகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

 
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ’பீப்’ பாடல் சில நாட்களாக இணையதளங்களில் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடையேயும், பெண்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, புதுகை, கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இந்த நிலையில், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தயாரித்துள்ள ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பீப் சாங் என்ற ஆபாசப் பாடலை கண்டித்து, சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் மகஇகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்